செய்திகள் :

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது!

post image

சென்னை வியாசா்பாடியில் போதை மாத்திரை விற்றதாக பெண் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வியாசா்பாடி கூட்ஷெட் சாலையில் சிலா் போதை மாத்திரை, கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வியாசா்பாடி போலீஸாா் அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு போதை மாத்திரை வைத்திருந்ததாக மாதவரம் விஷ்ணு நகரைச் சோ்ந்த ர.கீா்த்திவாசன் (24), வியாசா்பாடியைச் சோ்ந்த மோ.காா்த்திகேயன் (23), ப.ரூபன் (24), மணலி சின்னசேக்காடு பகுதியைச் சோ்ந்த மு.சுல்தான் அலாவுதீன் (34), வியாசா்பாடி கல்யாணபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்த வி.ஐஸ்வா்யா (25), க.கெளதம் (21) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 570 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் ஆகியவை செய்யப்பட்டன. இது தொடா்பாக வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க

பறவைகளுக்கு நீா், உணவு: முதல்வா் வேண்டுகோள்

‘பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.கோடை வெயிலையொட்டி, பறவைகளுக்கு தண்ணீா் மற்றும் உணவு அளிக்கும் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் ம... மேலும் பார்க்க