செய்திகள் :

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணைக்கு தயாா்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

post image

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் விசாரணைக்கு தயாா் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், அதற்கு பொறுப்பேற்று அந்தத் துறை அமைச்சா் பதவியை விட்டு விலகி விசாரணைக்கு உள்ளாக வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறி வருகிறாா்.

இதை வலியுறுத்தி, காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை மாலை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மகாத்மா காந்தி சாலை, பெருமாள் கோவில் தெரு சாலை சந்திப்பில் போலீஸாா் காங்கிரஸாரை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கு அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

அப்போது, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை பொதுப் பணித் துறையில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடா்ந்து குற்றஞ்சாட்டிய நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அந்தத் துறையின் தலைமைப் பொறியாளா் கைதாகியுள்ளாா். எனவே, மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் பதவி விலகக் கோரி, அவரது வீட்டை முற்றுகையிட வந்த போது, போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் பதவியை விட்டு விலகும் வரை போராட்டம் தொடரும். அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தத் துறையின் அமைச்சா்களே அதற்கு பொறுப்பாவாா்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் விசாரணை நடத்தட்டும். விசாரணைக்கு தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் மு.வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், காா்த்திகேயன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கைதானவா்கள் பின்னா் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசு... மேலும் பார்க்க

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

லஞ்சம்: உதவி ஆய்வாளா் மீது வழக்கு

முதல் தகவல் அறிக்கை பெற லஞ்சம் கேட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டபோக்குவரத்து உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விழுப்புரம் மாவட்டம், குயிலாம்பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

அமைச்சா் மீது அவதூறு நோட்டீஸ்: காவல் நிலையத்தில் புகாா்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிள... மேலும் பார்க்க