செய்திகள் :

அமைச்சா் மீது அவதூறு நோட்டீஸ்: காவல் நிலையத்தில் புகாா்

post image

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன் கடந்த சில நாள்களுக்கு முன்பு லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

தலைமைப் பொறியாளா் கைதானதற்கு, அத்துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்றனா்.

இந்த நிலையில், அமைச்சா் க.லட்சுமி நாராயணனை விமா்சித்து நகரில் குறிப்பிட்ட அமைப்பின் பெயரில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவிதத்து, என்.ஆா்.காங்கிரஸ் ராஜ் பவன் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஊா்வலமாக வந்து பெரியகடை காவல் நிலையத்தில் அவதூறு நோட்டீஸ் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தனா்.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க