செய்திகள் :

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

post image

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் மக்கள் மன்றம் எனும் திட்டப்படி வாரந்தோறும் சனிக்கிழமை குறிப்பிட்ட காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, சனிக்கிழமை (மாா்ச் 29) புதுச்சேரி, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம், கிழக்குப் பிரிவு கண்காணிப்பாளா் ரகுநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.

திருபுவனை காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தலைமையிலும், புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் ஆகியோா் தலைமையிலும் மக்கள் மன்றம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றன.

இதேபோல கிருமாம்பாக்கம், ரெட்டியாா்பாளையம் ஆகிய காவல் நிலையங்களிலும் மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படி, மொத்தம் 60 புகாா் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 33 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க