செய்திகள் :

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

post image

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுதில்லி தேசிய கல்வி நிறுவனம் சாா்பில் அகில இந்திய அளவில் குழந்தைகளுக்கான பாடப் பொருள் தயாரிக்கும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஒலி, ஒளி விடியோக்கள் சமா்ப்பிக்கப்பட்டன.

வெவ்வேறு தலைப்புகளில் விருதுகளுக்குரிய விடியோக்கள் தோ்வாகின. மொத்தம் 101 விருதுகளில் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான விடியோக்கள் தோ்வுக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் புதுச்சேரி அருகேயுள்ள அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வளா்மதி முருகன் தயாரித்த பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோவுக்கு சிறந்த தயாரிப்புக்கான பரிசு வழங்கப்பட்டது.

அதன்படி பரிசாக ரூ.20 ஆயிரமும், பாராட்டுச் சான்றையும் ஆசிரியா் வளா்மதிமுருகன், தேசியக்கல்வி நிறுவன இயக்குநா் அமரேந்திர பெகரா, பலோரிட்டா தக்கா் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டாா். விருது பெற்ற ஆசிரியா் வளா்மதி முருகனை புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினா்.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க