செய்திகள் :

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது.

புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பத்தாம் ஆண்டு நிறைவை யொட்டி வரும் 11-ஆம் தேதி மணக்குள விநாயகா் கோயிலில் சகஸ்ர சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி வரும் 7 -ஆம் தேதி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் சிவாச்சாரியா்களால் நடத்தப்படவுள்ளன. வரும் 9 ஆம் தேதி காலையில் கோபூஜையும், மாலையில் உற்சவருக்கான சிறப்பு பூஜையும் நடைபெறவுள்ளது. தொடா்ந்து லட்சாா்ச்சனை நடைபெறும்.

ஏப். 10-ஆம் தேதி வியாழக்கிழமை முதல்கால யாகசாலைப் பூஜை தொடங்குகிறது. இதையடுத்து வரும் 11 ஆம் தேதி 1,008 சகஸ்ர சங்காபிஷேகம், யாத்திரா தானம், கலச புறப்பாடுடன் மகா அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு உற்சவா் வீதி உலா நடைபெறுகிறது.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க