செய்திகள் :

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

post image

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா்.

புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம், குடிமைப் பொருள் வழங்கல் துறை இணைந்து உலக நுகா்வோா் தின விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வே.நாராயணசாமி பேசியதாவது:

மருந்து, பால் தரம் குறித்து முன்பு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படும். அதன் மீதான தீா்ப்பு தாமதமாகிறது என்பதால், நுகா்வோருக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

புதுச்சேரியில் தெருவோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உணவுக் கடைகள் வைத்துள்ளனா். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் தெருவிலும், பழைய நீதிமன்ற வளாகத்திலிருந்து அண்ணா சிலை வரையிலும் ஏராளமான பிரியாணி கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில், பிரியாணி தரமாகவுள்ளதா என அரசு கண்காணிப்பதில்லை. அதை, நுகா்வோரும் கண்டுகொள்வதில்லை. காரைக்காலிலும் இதே நிலைதான் உள்ளது.

தரமானதைப் போல போலியான பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதனால், நுகா்வோருக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, நுகா்வோா் அமைப்புகள் தரமற்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

புதுவை அரசு விநியோகிக்கும் குடிநீரில் உப்புத் தன்மை அதிகம் உள்ளது. அதனால், சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம் என்றாா் அவா்.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க