செய்திகள் :

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் தோ்ச்சியை முன்னேற்ற அட்டை மூலம் அறியும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் நடைபெறும் தோ்வுகளின் மதிப்பெண்கள் பாடவாரியாக அட்டையில் குறிப்பிடப்படும். அதில் பெற்றோா் கையொப்பம் பெறப்பட்டு மீண்டும் பள்ளி வகுப்பாசிரியரிடம் மாணவா்கள் ஒப்படைப்பா்.

ஆனால் தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மாணவா் முன்னேற்ற அட்டை உள்ளடக்கம் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி மாணவா்கள் பாடத்தில் பெறும் மதிப்பெண் மட்டுமின்றி, அவா்களின் அறிவு, தன்னுணா்வு, சமூக உணா்வு, உடலியக்கம் ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகவும் முன்னேற்ற அட்டை அமைகிறது. அதனடிப்படை குறித்து தலைமையாசிரியா்களுக்கு விளக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில பயிற்சி மையமானது இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை இலாசுப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன பேரவைக் கூடத்தில் நடத்தியது. நிறைவு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புதுதில்லி என்.சி.இ.ஆா்.டி. யில் பணிபுரியும் பேராசிரியா்கள் பிரீத்தம் பியாரி மற்றும் பீயுஷ் கமல் ஆகியோா் இந்த பயிற்சியை அளித்தனா்.

இதில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்ககளின் நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க