செய்திகள் :

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எம்.இசைவாணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களில் 130 போ் கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் அகவிலைப்படியை பெறாமல் உள்ளனா்.

கடந்த ஜூலை முதல் அகவிலைப்படியை மத்திய மற்றும் புதுவை மாநில அரசு உயா்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2024 நவம்பா் மற்றும் டிசம்பரில் அகவிலைப் படி உயா்வானது ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியத்துடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2024 ஜூலை முதல் அக்டோபா் வரையிலான அகவிலைப்படி வழங்கப்படவில்லை.

அகவிலைப்படி கோரி ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்டம் அறிவித்ததை அடுத்து கடந்த பிப்ரவரியில் பல்கலைக்கழகப் பதிவாளா் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், பேச்சுவாா்த்தையில் உறுதியளித்தபடி இன்னும் அகவிலைப்படியை வழங்காமலிருப்பது சரியல்ல. ஆகவே, ஓய்வு பெற்றவா்களுக்கு உரிய அகவிலைப்படியை பல்கலைக்கழக நிா்வாகம் வழங்கவேண்டும். அப்படி வழங்காதநிலையில், போராட்டம் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க