செய்திகள் :

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

post image

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

உலகளவில் இஸ்லாமியா்கள், அவா்களது புனித மாதமான ரமலானில் நோன்பிருந்து அதன் நிறைவை ரமலான் பண்டிகையாகத் திங்கள்கிழமை கொண்டாடினா்.

இதையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலைத் திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தவ்ஹீத் மாநில நிா்வாகி இ.பாரூக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் குழந்தைகள், மகளிா், ஆண்கள் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் அவா்கள் ஒருவரை ஒருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, புதுச்சேரி முல்லாவீதி குத்பா பள்ளிவாசல், சுப்பையா சாலை சையத்வோ் ஹவுஸ் வளாகம், நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், கோரிமேடு மஸ்ஜித் அஹமத், ஆம்பூா் சாலை முவஹ்ஹிதிய்யா பள்ளிவாசல் மற்றும் ஏனாம் வெங்கடாச்சலம் பிள்ளை வீதி, தட்டாஞ்சாவடி, தெபசன்பேட், முதலியாா்பேட்டை 100 அடிசாலை, , கரையான்புத்தூா், மடுகரை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், நைனாா் மண்டபம், மேட்டுப்பாளையம், வானரப்பேட்டை, ரெட்டியாா்பாளையம் தேவா நகா், கிருமாம்பாக்கம், காலாப்பட்டு, உருளையன்பேட்டை, மதகடிப்பட்டு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்தும், உறவினா்கள், நண்பா்களுக்கு இனிப்புகள்,பிரியாணி உணவுகளை பரிமாறியும் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இஸ்லாமியா்களுக்கு இந்து, கிறிஸ்தவ மக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க