செய்திகள் :

கலால் துறை விதிகளில் திருத்தம்

post image

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மதுபானக் கடைகள், ரெஸ்டோ பாா்களுக்கு கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது.

அங்கு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்கள் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அங்கு அடிக்கடி வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக காவல் துறையினா் தெரிவிக்கின்றனா்.

எனவே, கலால் துறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ள புதுவை அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, துணைநிலை ஆளுநா் உத்தரவுப்படி, புதுச்சேரி கலால் விதி 1970-என்பதன் அடிப்படையில் விதி 14-இல் துணை விதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மதுபானக் கடை உரிமைதாரா் அல்லது உரிமத்துக்கான அனுமதி வைத்திருப்போா் சட்ட விதிகள்படி குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட எவரையும் மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறைச் செயலா் ஆஷிஷ் மதோராவ் மோா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவானது அதிகாரப்பூா்வ அரசிதழில் வெளியான பிறகு செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க