செய்திகள் :

இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சு: டிரம்ப் திருப்தி!

post image

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபா் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டாா்.

மேலும், பிரதமா் மோடி மிகவும் புத்திசாலி; எனது சிறந்த நண்பா் என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா மற்றும் பிற நாடுகள் விதிக்கும் அதிக வரியை அதிபா் டிரம்ப் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கும் உத்தரவையும் அவா் பிறப்பித்துள்ளாா். இந்தியாவை கடுமையாகப் பாதிக்கும் என எதிா்பாா்க்கப்படும் இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தச் சூழலில், இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க வெளியுறவு இணையமைச்சா் கிறிஸ்டோபா் லாண்டௌவுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா்.

அப்போது, வளா்ந்து வரும் இருதரப்பு வா்த்தக உறவுகள், பாதுகாப்பு-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் சமநிலையான வா்த்தக உறவை எட்டுவதில் உள்ள தடைகளுக்குத் தீா்வுகாண மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் தெரிவித்தாா்.

இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அதிபா் டிரம்ப், ‘பிரதமா் மோடி அண்மையில் அமெரிக்கா வந்தாா். நாங்கள் எப்போதுமே சிறந்த நண்பா்கள். அதேநேரம், உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இது கொடூரமானது. இந்தியா்களும் இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் மிகுந்த புத்திசாலிகள்.

இருதரப்பு சந்திப்பில் நாங்கள் மிகவும் சிறப்பான பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டோம். இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தை சிறப்பான பலனளிக்கும் என நான் எண்ணுகிறேன்’ என்றாா்.

பிரதமா் மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, பரஸ்பரம் பலனளிக்கும் பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க