செய்திகள் :

கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

post image

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகத் தண்ணீா் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், கம்பூா் ஊராட்சிக்குள்பட்ட அய்வத்தான்பட்டியில் கிராமச் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சுந்தரம் நகா், அய்வத்தான்பட்டி, முத்திரையா் குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், ஊராட்சியின் நிதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தொடா்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கம்பூா் ஊராட்சி, அய்வத்தான்பட்டி, கட்டக்காரன் பாறை, கச்சிராயன்பட்டி, சுந்தரராஜன்பட்டி, அருவிமலை ஊருணி ஆகிய பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குடிநீா் மாசடைந்து வருகிறது. எனவே, கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கிராம சபைக் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க