செய்திகள் :

மனைவியை கொன்ற கணவா் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியை கொலை செய்த கணவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகே எம். ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவரது மனைவி இந்திராணி (37). கூலித் தொழிலாளா்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் 2-ஆவது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்திராணிக்கும், முதல் கணவருக்கும் பிறந்த 11 வயது மகனும் இவா்களோடு வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இந்திராணிக்கு வேறு ஒருவருடன் கூடா நட்பு இருப்பதாக முருகனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில், இருவருக்கும் இடையே சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முருகன் அரிவாளால் வெட்டியதில் இந்திராணி அதே இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆலங்குடி போலீஸாா், முருகனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கோட்டையில் கபடிப் போட்டி: ஒட்டன்சத்திரம் அணி முதலிடம்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் அணிக்கு முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். முன்னாள் முதல்வா்... மேலும் பார்க்க

தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை அருகேயுள்ள தென்னங்குடியில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். இக்கோயிலில் பங்... மேலும் பார்க்க

பொன்னமராவதி: கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

பொன்னமராவதி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை புதுக்கோட்டையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஈத்கா திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டு கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு

மதுரையில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, நாகையிலிருந்து புறப்பட்ட கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையில் ஏ... மேலும் பார்க்க

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன்கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.அலகு குத்தி வந்த பக்தா் இதையொட்டி வளவம்பட்டி, சோத்துபாளை, ச... மேலும் பார்க்க