செய்திகள் :

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

post image

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ், தொழிலதிபா். இவரை, மாா்ச் 11-ஆம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் அறிமுகமில்லாத பெண் ஒருவா் மது அருந்த அழைத்தாராம்.

இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் பிரகாஷ்ராஜ் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.

அப்போது, மது அருந்தி பிரகாஷ்ராஜ் மயங்கிய நிலையில், அவரிடமிருந்த தங்க நகைகள், கைப்பேசி ஆகியவற்றை அந்தப் பெண் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சிலம்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி கலையரசியை (42) கைது செய்தனா்.

இந்த நிலையில், கலையரசியை மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்தனா்.

அதன்படி, ஆண்டிமடம் சிலம்பூா் பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க