செய்திகள் :

டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை: சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

post image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரின் மீட்புப் பணிகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை என நாசா புகழாரம் சூட்டியுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று இது எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள்கள் தங்கியிருந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரா்களும் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் (இந்திய நேரப்படி) பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரா்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாள்கள் ஆய்வை முடித்துவிட்டு இவா்கள் பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாா்லைனா் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இவா்கள் பூமிக்கு உடனடியாகத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவா்கள் தொடா்ந்து சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி வீரா்கள் ஆனி மெக்லைன், நிகோல் அயா்ஸ், ஜப்பானைச் சோ்ந்த டகுயா ஒனிஷி, ரஷியாவைச் சோ்ந்த கிரீஸ் பெஸ்கோஸ் ஆகியோருடன் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

புதிய விண்வெளி வீரா்களிடம் பணிகளை ஒப்படைத்த பின்னா், அமெரிக்காவைச் சோ்ந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோா், நிக் ஹேக் மற்றும் ரஷியாவைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் ஆகியோா் அங்கிருந்த டிராகன் விண்கலன் மூலம் பூமிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த நாசாவின் செய்தித்தொடர்பாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ் தெரித்துள்ளதாவது,

''விண்வெளி வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்வெற்றிகளில் ஒன்று. அதிபர் டிரம்ப் இல்லாமல் இது சாத்தியமில்லை. நாசாவின் அடுத்த நிர்வாகியாக பணியாற்ற ஜாரட் டெய்லர் ஐசக்மேனை அவர் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க மக்கள் ஒருகாலத்தில் அவரை வெளியேற்றினர். ஆனால், மீண்டும் டிரம்ப்பிற்கு அமெரிக்க மக்கள் பொறுப்புகளை வழங்கியுள்ளனர். தொழில் துறையில் அவர் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார் என்பதை அவரின் நிர்வாகத்தின் மூலம் உணரலாம். தொழில்முனைவோரும் வணிக விண்வெளி வீரருமான ஜாரட் டெய்லரை அவர் பரிந்துரை செய்ததில் இருந்து அதனை அறியலாம்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நாணய நிதியம் தகவல்

சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசா... மேலும் பார்க்க

எக்ஸ் தளம் மீண்டும் விற்பனையானது!

எக்ஸ் தளம் மீண்டும் கைமாற்றப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையும் அதன் உரிமையாளராக எலான் மஸ்க் என்பதுதான் சுவாரசியமே!எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவோர், அதில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 60 கோடிக்கும் மேல்.... மேலும் பார்க்க

ஆபரேஷன் பிரம்மா: மியான்மர் அதிகாரிகளிடம் நிவாரணப் பொருள்கள் ஒப்படைப்பு!

புது தில்லி: ஆபரேசன் பிரம்மா பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக ச... மேலும் பார்க்க

நிலைக்குலுங்கிய மியான்மர்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் ச... மேலும் பார்க்க

மியான்மரில் ஒரே நாளில் 15 முறை நிலநடுக்கம்! என்ன காரணம்?

மியான்மரில்(பர்மா) ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை ப... மேலும் பார்க்க

டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

கூகுள் மேப்பில் டைம் டிராவல் செய்யும்வகையில் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் எவ்வாறு இருந்தது என்று தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், ... மேலும் பார்க்க