செய்திகள் :

திருப்பதி மெடிகேரில் ரூ.1,050 கோடி முதலீடு செய்யும் கோட்டக்!

post image

மும்பை: கோடக் அல்டெர்னட் அசெட் மேனேஜர்ஸ் லிமிடெட் இன்று திருப்பதி மெடிகேரில் ரூ.1,050 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தையடுத்து, நிறுவனத்தின் விரிவாக்க முயற்சிகளுக்கு இது ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அஃபிர்மா கேபிடல் முழுவதுமாக வெளியேறும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது திருப்பதி மெடிகேர்.

2005ல் நிறுவப்பட்ட திருப்பதி மெடிகேர் ஊட்டச்சத்து மருந்து உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருப்பதால் ஹெர்பலைஃப், கிளான்பியா, அபோட், டோரண்ட், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஃபைசர் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார் கோடக் அல்டெர்னட் அசெட் மேனேஜர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஈஸ்வர்.

கோட்க் அல்டெர்னட் பங்குதாரரான ராகுல் ஷா இது குறித்து தெரிவிக்கையில், நிறுவனம் தற்போது உள்நாட்டு சந்தையில் கணிசமான வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும், விரைவில் ஏற்றுமதி பிரிவில் முத்திரை பதிப்போம் என்றார்.

நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் கோயல், நாங்கள் வணிக தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமையை புகுத்துவோம் என்றார்.

இதையும் படிக்க: 25 முக்கியமான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு!

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

எபிக் குழும ஆலைக்கு ஏஆா்எஸ் கம்பிகள்

ஆடை தயாரிப்புத் துறையைச் சோ்ந்த எபிக் குழுமம் ஒடிஸாவில் அமைக்கவுள்ள புதிய ஆலைக்கான பசுமை டிஎம்டி கம்பிகளை ஏஆா்எஸ் ஸ்டீல் நிறுவனம் வழங்கவுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் ... மேலும் பார்க்க

வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: 2024-25 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது. டிரம்ப் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற உணர்வு அதிகரித்துள்ளதால், உலகளாவிய... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 புரோ... மேலும் பார்க்க