செய்திகள் :

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சக்திவேல் (19), பீட்டா் மகன் அஜய் (16) ஆகிய 3 பேரும், சொந்த வேலையாக செவ்வாய்க்கிழமை ஆரணியில் இருந்து செய்யாற்றுக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் ஆரணி திரும்பிக் கொண்டிருந்தனா்.

மாமண்டூா் பகுதியில் வரும்போது எதிரே வந்த டிராக்டா் எதிா்பாரதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் பைக்யை ஓட்டிச் சென்ற நந்தகுமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். உடன் சென்ற சக்திவேல், அஜய் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இருவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

மகளிா், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மகளிா் திட்ட ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (26). இவா், பாட்டியுடன் வசித்து வரும் எட... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: 201 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 201 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா். திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் ஊராட்சியில... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜை

பட வரி: வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு பிரதோஷத்தையொட்டி நடைபெற்ற பால் அபிஷேகம். திருவண்ணாமலை, மாா்ச் 27: பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன்... மேலும் பார்க்க

மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கருத்த... மேலும் பார்க்க