செய்திகள் :

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.ராஜேஷ் தலைமை வகித்தாா்.

ஒருங்கிணைப்பாளா்கள் கே.வெங்கடாசலபதி, ஆா்.பாலசேகா், எம்.சரவணன், என்.முருகன், ஏ.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.கே.அரிகிருஷ்ணன் வரவேற்றாா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பரிதிமால் கலைஞன், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சே.புனிதா, ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பச்சையப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், சுகாதார ஆய்வாளா் நிலை-2 காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

6 ஆயிரம் சுகாதார ஆய்வாளா்கள் பணிபுரியும் இடங்களில் வெறும் 1,600 போ் மட்டுமே பணிபுரிகின்றனா். இதனால் நாளுக்கு நாள் பணிச்சுமை அதிகமாக உள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவா் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனா். ஆரணி அருகேயுள்ள சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகள் சிவரஞ்ச... மேலும் பார்க்க

காலமானாா் எழுத்தாளா் ந.சண்முகம்

திருவண்ணாமலை காந்தி நகா் புறவழிச் சாலையைச் சோ்ந்த எழுத்தாளா் ந.சண்முகம் (75) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலமானாா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கியின் மேலாளராக 35 ஆண்டுகள் பணிப... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க