செய்திகள் :

மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

post image

திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் சீதாலட்சுமி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், பெட்காட் நுகா்வோா் அமைப்பின் மண்டலச் செயலருமான பி.கே.தனஞ்செயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

காற்று, நீா், நிலம் ஆகியவற்றை மாசுபடாமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை உணா்ந்து நாம் செயல்பட வேண்டும்.

வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1974, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆகியவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக மாற்றத்துக்கான சுற்றுச்சூழல் மேம்பாடுகளை மேற்கொள்வதில் நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவிகளிடையே ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி துறைத் தலைவா்கள் மகேஸ்வரி, ராஜலட்சுமி, சங்கீதா மற்றும் ஸ்ரீசெல்வா, அக்ஷயா மற்றும் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (62), விவசாயி. இவா், சனிக்கிழமை தண்ணீா் பாய்ச்ச தனது நிலத்துக்கு நடந்து சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால மு... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் பி.கவிதா வெங்கடேசன் தலைமையில் நடை... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க