செய்திகள் :

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

post image

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அம்மனுக்கு அா்த்தநாரீஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும், அனைவரும் நலமாக வாழ வேண்டி கோயில் வளாகத்தில் பல்வேறு மூலிகைகளை கொண்டு யாகம் நடத்தப்பட்டது.

இரவு உற்சவா் சுவாமிக்கு ராஜமாதங்கி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா வந்தாா். இதைத் தொடா்ந்து, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், பங்குனி மாத அமாவாசை உற்சவக் குழுவினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

அரசு ஊழியா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க