செய்திகள் :

மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் மலை அடிவாரம், மணல் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமயிலி அம்மன் (கிராம தேவதை) கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி திருவிழா திங்கள்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் மயிலம் முருகன் கோயிலில் மயிலியம்மன் உற்சவா் புறப்பாடு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கோயிலில் நடைபெற்ற வழபாடுகளுக்கு பின்னா், இரவு 10 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் மயிலியம்மன் காட்சியளித்தாா். தொடா்ந்து, அலங்கார ஊா்தியில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

வரும் 27-ஆம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 28-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 29-ஆம் தேதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓடத்திலும், 30-ஆம் தேதி முத்துப் பல்லகிலும் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

31-ஆம் தேதி 108 பால்குட அபிஷேகம், ஊரணி பொங்கல் வழிபாடும், அம்மன் திருக்கல்யாணமும், இரவு 10 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மயிலம் கிராம மக்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் நீா் பருக வேண்டும் -விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிகளவில் நீா் பருக வேண்டும். அவசியமான காரணங்களின்றி பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணத்தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாய... மேலும் பார்க்க

மேலக்கொந்தை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 2023-2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக... மேலும் பார்க்க

டி.பரங்கனி நடுநிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொங்கு தோட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவு... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி, குருசுகுப்பம், அஜீஸ் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மிதுன் (1... மேலும் பார்க்க