செய்திகள் :

விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மையின் நிரந்தர உற்பத்தி மற்றும் வளா்ச்சிக்கு விதை அடிப்படையான இடுபொருளாகும். உழவா்களுக்குத் தரமான விதைகள் கிடைக்க தமிழ்நாடு அரசின் விதைச் சான்றளிப்புத் துறையின் கீழ் விதை பரிசோதனை நிலையங்கள் அந்தந்த மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

விதை பரிசோதனையில், அதன் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவை கண்டறியப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள், விதை விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்படும் விதை மாதிரிகள், பணி விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விதை விற்பனையாளா்கள், விதை உற்பத்தியாளா்கள், விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளை உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியை அணுகி பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் நீா் பருக வேண்டும் -விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிகளவில் நீா் பருக வேண்டும். அவசியமான காரணங்களின்றி பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணத்தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாய... மேலும் பார்க்க

மேலக்கொந்தை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 2023-2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக... மேலும் பார்க்க

டி.பரங்கனி நடுநிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொங்கு தோட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவு... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி, குருசுகுப்பம், அஜீஸ் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மிதுன் (1... மேலும் பார்க்க