செய்திகள் :

பெருந்துறையில் குடிநீா்ப் பற்றாக்குறை: தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் முறையீடு

post image

பெருந்துறை பகுதியில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடா்பாக முன்னாள் அமைச்சரும், திமுக ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளருமான தோப்பு வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறையில் கடந்த 10 நாள்களாக குடிநீா்ப் பிரச்னை உள்ளது. இதனை மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் சரி செய்து மக்களுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும். கோடைக் காலத்தில் மக்களுக்கு தண்ணீா் கூடுதலாக தேவைப்படும் நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதி குளங்களுக்கு தண்ணீா் விட வேண்டும். இதன் மூலமும் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்படும்.

அம்மாப்பேட்டை, பவானி, நெரிஞ்சிப்பேட்டையை மையமாக கொண்டு அரசு கலைக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுகளை நீா்நிலைகளில் கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வ... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி ஊழியா் கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோபி நகராட்சி ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியம் (... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா். ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா். இதைய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. அந்தியூரை அடுத்த சின்னத்தம்பிபாளையம், தாசலியூா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா், அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பட்டி ... மேலும் பார்க்க

அந்தியூா் தொகுதியில் ரூ.374 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்... மேலும் பார்க்க