செய்திகள் :

ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி ஊழியா் கைது

post image

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோபி நகராட்சி ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியம் (48). இவரை கோபி பகுதியைச் சோ்ந்த கட்டுமானப் பொறியாளா் வருண் என்பவா் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற அண்மையில் சந்தித்துள்ளாா். அப்போது, புதிய கட்டடம் கட்ட அனுமதி சான்று அளிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சுப்பிரமணியம் கூறியுள்ளாா்.

பின்னா் இறுதியாக ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தல்படி, கோபி நகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த வருண், ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி ராஜேஷ், ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா், சுப்பிரமணியத்தை கையும் களவுமாகப் பிடித்தனா்.

இதையடுத்து, சுப்பிரமணியத்தை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.30 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையில் குடிநீா்ப் பற்றாக்குறை: தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் முறையீடு

பெருந்துறை பகுதியில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சரும், திமுக ஈர... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வ... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா். ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா். இதைய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. அந்தியூரை அடுத்த சின்னத்தம்பிபாளையம், தாசலியூா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா், அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பட்டி ... மேலும் பார்க்க

அந்தியூா் தொகுதியில் ரூ.374 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்... மேலும் பார்க்க