செய்திகள் :

அந்தியூா் தொகுதியில் ரூ.374 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம்

post image

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அத்தாணி, கூகலூா், பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீா் வழங்கிட குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளுதல், அந்தியூா், வாணிபுத்தூா் வாரச் சந்தைகளில் மேம்பாட்டுப் பணிகள், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் சந்தை புதுப்பித்தல், நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களை அறிவித்த துறையின் அமைச்சா் கே.என்.நேருவை நேரில் சந்தித்து சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நன்றி தெரிவித்தாா்.

அந்தியூா் தொகுதிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் எஸ்.கே.காளிதாஸ் தலைமையில் திமுகவினா் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

பால் கொள்முதல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தல... மேலும் பார்க்க

பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்

பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பரிசலில் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது. பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க

நெசவுக்கூலி உயா்வு: தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி

இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு அறிவித்திட்ட தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா: தற்காலிக கடைக்கு அதிக வாடகை கேட்பதாக வியாபாரிகள் புகாா்

பண்ணாரி அம்மன் கோயிலில் தற்காலிக கடை அமைப்பதற்கு மூன்று மடங்கு அதிகமாக வாடகை வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா். இது குறித்து பவானி மற்றும் சுற்றுவட்டாரப் ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.23 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 82 தேங்காய்ப் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.153க்கும், அதிகபட்சம் ரூ.174.86க்கும், சராசரியாக ர... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க