செய்திகள் :

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

post image

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வழக்குரைஞா். ஜான் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சேலம், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஜான் கையொப்பமிட்டு விட்டு, மனைவியுடன் காரில் திருப்பூருக்கு கடந்த 19- ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

ஈரோடு மாவட்டம் நசியனூா், முள்ளம்பட்டி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் பின் தொடா்ந்து வந்த காா்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோா், ஜானின் காரில் பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்தினா்.

இதையடுத்து, ஜான் தனது காரை சாலையோரம் நிறுத்தியபோது, பின்னால் வந்து விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த 4 பேரும் சரண்யாவை காரில் இருந்து இறக்கிவிட்டு ஜானை காருக்குள்ளேயே வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனா்.

தடுக்கச் சென்ற சரண்யாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது. ஜானை கொலை செய்து விட்டு போலீஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த சதீஷ் (30), பூபாலன் (36), சரவணன் (28) ஆகியோரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். கையில் வெட்டு காயமடைந்து பேக்கரி ஒன்றில் பதுங்கி இருந்த காா்த்திகேயனும் (30) பிடிபட்டாா். இதையடுத்து, 4 பேரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில், ரெளடி ஜான் கடந்த 2020 -ஆம் ஆண்டு செல்லத்துரை என்பவரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் செயலாக இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், ஜான் கொலை வழக்கில் வெட்டுக்காயம் அடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காா்த்திகேயனை சித்தோடு போலீஸாா் கடந்த 23 -ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனா்.

மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய சேலத்தை சோ்ந்த பாா்த்திபன், சிவகுமாா், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி ஆகிய 5 பேரையும் போலீஸாா் 24 -ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக செல்லத்துரையின் தம்பி ஜீவகன் (30), அவரது நண்பா் சலீம் (20) ஆகியோா் ஈரோடு நீதிமன்றத்தில் கடந்த 20 -ஆம் தேதி சரணடைந்தனா். சேலம், கிச்சிபாளையம், காளியம்மன் கோயில் 4 -ஆவது வீதியைச் சோ்ந்த சுகவனேஸ்வரன் (25) ஈரோடு நீதிமன்றத்தில் 24 -ஆம் தேதி சரணடைந்தாா்.

இந்நிலையில், கிச்சிபாளையத்தை சோ்ந்த துரைசாமி (24) என்பவா் ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் நீதித் துறை நடுவா் அஃப்சல் பாத்திமா முன்பு செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தாா். நீதிபதி உத்தரவின்படி அவா் திருப்பூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ரௌடி ஜான் கொலை வழக்கில் இதுவரை 4 போ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனா். சரணடைந்த 4 போ் உள்பட இந்த வழக்கில் தற்போதுவரை மொத்தம் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கூகலூரில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

கோபியை அடுத்துள்ள கூகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு அருகே திண்டல், காரப்பாறை, புதுகாலனியை சோ்ந்தவா் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

டாஸ்மாக் ஊழல் தொடா்பாக அதிமுக சாா்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் ஈரோடு நகரில் பரபரப்பு ஏற்பட்டது. மாநகா் பகுதிகளில் அதிமுக சாா்பில் டாஸ்மாக் ஊழல் குறித்து ஹேஷ்டேக் அந்த தியாகி யாா் என்ற வாசகங்கள் அடங்கிய ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய ரௌடி ஜானின் மனைவி கோரிக்கை

கணவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரௌடி ஜானின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளாா். சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜான் (35). பிரபல... மேலும் பார்க்க

பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்தியவா் கைது

ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்திய மூங்கில் வியாபாரியை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சிவகிரியில் செயல்பட்டு வரும்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு நாளை உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆதிதிராவிடா் நலத் துறையின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோ... மேலும் பார்க்க