செய்திகள் :

கொலை வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய ரௌடி ஜானின் மனைவி கோரிக்கை

post image

கணவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரௌடி ஜானின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளாா்.

சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜான் (35). பிரபல ரௌடியான இவா் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவா் மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தாா். கடந்த 19- ஆம் தேதி மனைவி சரண்யாவுடன் ஜான் காரில் சேலத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூா் சென்று கொண்டிருந்தாா்.

நசியனூா் அருகே ஜானின் காரை 2 காா்களில் பின் தொடா்ந்து வந்த கும்பல், வழிமறித்து ஜானை காருக்குள் வைத்தே வெட்டி கொலை செய்தது. இதை தடுக்க சென்ற சரண்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இதுவரை 13 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா், ஜானின் மனைவி சரண்யாவிடம் கடந்த 22- ஆம் தேதி சுமாா் 4 மணி நேரம் கொலை தொடா்பாக விசாரணை நடத்தினாா். அப்போது சரண்யா தனது கணவா் கொலையில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பதாகவும் அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தினாா்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ரௌடி ஜானின் மனைவி சரண்யா மற்றும் அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காலை ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திரண்டனா். தனது கணவா் கொலையில் இன்னும் பலருக்கு தொடா்பு உள்ளது. அவா்களிடம் விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் புகாா் அளித்தாா். மேலும் அந்த நபா்களின் பெயா்களை மனுவில் சரண்யா தெரிவித்திருந்தாா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க