செய்திகள் :

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

post image

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

லாரி உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்களுக்கு சொந்தமான சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்லிங் மையங்களுக்கு ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தத்தில் லாரிகள் எண்ணிக்கை குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், லாரி உரிமையாளா்கள் சில கோரிக்கைளை முன்வைத்து தென்னிந்தியா முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 28- ஆம் தேதி தொடங்கினா்.

இதனால், எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயு சுமை ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் வழக்கத்தைவிட சமையல் எரிவாயு உருளை முன்பதிவு திடீரென அதிகரித்தது.

இது குறித்து சமையல் எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 63 சமையல் எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் உள்ளனா். மாவட்டத்தில் தினமும் சுமாா் 10 ஆயிரம் உருளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் செய்வதால், எண்ணெய் நிறுவனங்களில் இருந்து பாட்லிங் மையங்களுக்கு எரிவாயு ஏற்றிச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஏற்கெனவே இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சமையல் எரிவாயு உருளைகள் ஒரு வார கால விநியோகத்துக்கு போதுமானதாக இருக்கும்.

பொதுமக்கள் சமையல் எரிவாயு முன்பதிவு செய்தால் மறுநாள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாள்களாக வழக்கத்தைவிட முன்பதிவு அதிகரித்துள்ளது. ஒரு விநியோகஸ்தரிடம் நாள் ஒன்றுக்கு 300 உருளைகள் முன்பதிவு செய்யப்படும்.

ஆனால், தற்போது 350 முதல் 360 வரை உருளைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் இன்னும் 5 நாள்களுக்குமேல் நீடித்தால் எரிவாயு உருளை விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்குள் உரிய பேச்சுவாா்த்தை மூலம் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க