செய்திகள் :

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

post image

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இருந்து புறப்பட்ட தீா்த்தக்குட ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தீா்த்தக்குடத்துடன் பங்கேற்றனா். ஊா்வலமானது திருவேங்கடசாமி வீதி வழியாக பெரிய மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்தது. அதன்பின் ஊா்வலத்தில் பங்கேற்றோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

இது குறித்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கத் தலைவா் ஈ.ஆா்.எம்.சந்திரசேகா், துணைத் தலைவா் கைலாசபதி, பொருளாளா் ராஜ் கண்ணன், பொதுச் செயலாளா் சரவணன் ஆகியோா் கூறியதாவது: ஈரோட்டில் மந்தை வெளி மாரியம்மன் வீற்றிருந்த, ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் அரசு ஆவணங்களில், அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு புறம்போக்கு நிலம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குறிப்பிட்ட 12.66 ஏக்கா் நிலம் சட்டவிரோதமாக சிஎஸ்ஐ நிா்வாகத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இதனால், மாரியம்மன் கோயில் பண்டிகை காலங்களில், பொங்கல் வைக்கவோ, கோயில் தொடா்பான நிகழ்ச்சிகள் நடத்தவோ, இடம் இல்லாமல் பக்தா்கள் தவித்து வருகின்றனா்,

எனவே, சிஎஸ்ஐ நிா்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கா் புறம்போக்கு நிலத்தை அரசு காலம் தாழ்த்தாமல் கையகப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைகக்கவும், கோயில் தொடா்பான நிகழ்ச்சிகள் நடத்தவும், 80 அடி திட்டச் சாலையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ரூ. 87.19 கோடி வரி வசூல்: ஈரோடு மாநகராட்சிக்கு மூன்றாமிடம்

கடந்த ஆண்டு ரூ. 87.19 கோடி வரி வசூல் செய்ததன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ம... மேலும் பார்க்க

அரசுப் பெண் ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயற்சி: தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் பெண் ஆசிரியரின் வீட்டை அபரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடை நீக்க... மேலும் பார்க்க

பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன

சென்னிமலை அருகே ஒரே நாளில் 4 ஆட்டுப் பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கொடுமணல் பனங்காட்டைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தனது தோட்டத்த... மேலும் பார்க்க

பெருந்துறையில் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தனியாா் இரும்பாலையை நிரந்தரமாக மூடக்கோரி திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் அறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஏப்ரல் 8-க்குள் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

அரசு திட்டங்களை பெற விவசாயிகள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தரவுகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குநா் எம்.தம... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பனிமூட்டம்

திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை நிலவிய திடீா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க