'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் நடப்பு ஆண்டு குண்டம் மற்றும் தோ்த் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த 18 -ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடா்ந்து, கடந்த 22 -ஆம் தேதி இரவு 3 கோயில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. இந்த கம்பங்களுக்கு நாள்தோறும் பக்தா்கள் புனித நீா் ஊற்றி வருகின்றனா்.
இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி அம்மனை வழிபட்டனா்.
மேலும், மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களின் சாா்பில் பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களுக்கு பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீா்த்தக்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா்.
ஒரு சில பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலை 5.30 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் கோயிலுக்கு ஊா்வலமாக வருவா். ஏப்ரல் 2 -ஆம் தேதி காலை 9 மணிக்கு தோ்வடம் பிடித்தலும், 5 -ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 6 -ஆம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.