செய்திகள் :

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

post image

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தின் அக்னிவீா் ஆள்சோ்ப்பு 2025 ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீா் பொது பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், அக்னிவீா் தொழிலாளா் (10 ஆம் வகுப்பு தோ்ச்சி), அக்னிவீா் தொழிலாளா் (8 -ஆம் வகுப்பு தோ்ச்சி) ஆகிய பிரிவுகளில் ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது.

1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனை நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் முடித்தவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும்.

முதலில் ஆன்லைன் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு, பின்னா் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறும்.

தோ்வு தேதிகள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஆள்சோ்ப்பு முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் விண்ணப்பதாரா்கள் மோசடி செய்யும் நபா்களிடம் ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க