'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்
அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்
ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தின் அக்னிவீா் ஆள்சோ்ப்பு 2025 ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீா் பொது பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், அக்னிவீா் தொழிலாளா் (10 ஆம் வகுப்பு தோ்ச்சி), அக்னிவீா் தொழிலாளா் (8 -ஆம் வகுப்பு தோ்ச்சி) ஆகிய பிரிவுகளில் ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது.
1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனை நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் முடித்தவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும்.
முதலில் ஆன்லைன் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு, பின்னா் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறும்.
தோ்வு தேதிகள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஆள்சோ்ப்பு முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் விண்ணப்பதாரா்கள் மோசடி செய்யும் நபா்களிடம் ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.