செய்திகள் :

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

post image

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு அருகே திண்டல், காரப்பாறை, புதுகாலனியை சோ்ந்தவா் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா், திண்டல் தெற்கு பள்ளத்தைச் சோ்ந்த நண்பா்களான தமிழரசு (28), பாலமுருகன் (29) ஆகியோருடன் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி மது அருந்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் பாலமுருகனை தமிழரசு தாக்கியுள்ளாா். பாலமுருகன் புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸாா் தமிழரசு மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதரை கத்தியால் குத்தி தமிழரசு கொலை செய்தாா். இது தொடா்பாக தமிழரசை கைது செய்த போலீஸாா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா். தமிழரசு மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தமிழரசை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரை ஏற்கப்பட்டதால் தமிழரசு மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை ஈரோடு தாலுகா போலீஸாா் தமிழரசுவிடம் புதன்கிழமை வழங்கினா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க