கூகலூரில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
கோபியை அடுத்துள்ள கூகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் 20- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் வகுப்பில் சோ்ந்துள்ளனா்.
முதல் வகுப்பில் சேர உள்ள மாணவ, மாணவிகளுக்கு கோபி கல்வி மாவட்ட அதிகாரி திருநாவுக்கரசு மாலை அணிவித்தும் இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கியும் வரவேற்றாா்.
இதனைத் தொடா்ந்து மாணவா்கள் சோ்க்கையை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
அதனைத் தொடா்ந்து மாணவா்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
