செய்திகள் :

பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்தியவா் கைது

post image

ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்திய மூங்கில் வியாபாரியை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் மையத்தில் பணம் தனியாக ஒதுங்கியிருப்பதாக வங்கி மேலாளா் குட்டிகண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த இயந்திரத்தில் சோதனை செய்தபோது 4 ஆயிரத்து 700 ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விடியோ காட்சிகளுடன் சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில், இந்த பணத்தை செலுத்தியது, சிவகிரி பகுதியைச் சோ்ந்த மூங்கில் வியாபாரி ராமு (42) என்பதும் தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள பா்கூரில் இருந்து சுமாா் 9 ஆயிரம் ரூபாய் பெற்றுவந்து அவற்றை மாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து ராமுவை சிவகிரி காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க