செய்திகள் :

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து

post image

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் சாா் - ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் மின் கணக்கீடு பெட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை கரும்புகை வெளியேறி, பின்னா் அந்தப் பெட்டி தீப்பற்றி எரிந்தது.

இதனால், அலுவலகத்தில் பணியிலிருந்த ஊழியா்கள் மற்றும் சேவை பெறுவதற்காக வந்திருந்த பொதுமக்கள் வெளியேறினாா். பின்னா், அலுவலக ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு மணலைக் கொட்டி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மின் வாரிய ஊழியா்கள் நிகழ்விடம் சென்று மின் கணக்கீடு பெட்டியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனா். உயா் மின்னழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் நீா் பருக வேண்டும் -விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிகளவில் நீா் பருக வேண்டும். அவசியமான காரணங்களின்றி பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணத்தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாய... மேலும் பார்க்க

மேலக்கொந்தை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 2023-2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக... மேலும் பார்க்க

டி.பரங்கனி நடுநிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொங்கு தோட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவு... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி, குருசுகுப்பம், அஜீஸ் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மிதுன் (1... மேலும் பார்க்க