செய்திகள் :

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் சிறிது நேரம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறுகையில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், அவர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், கேரளத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைச் சரியான நேரத்தில் பெறுவதில்லை. இதற்கு மத்திய அமைச்சரிடமிருந்து உறுதியான பதிலும் இல்லை.

இந்தத் திட்டத்தை முடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், தாமதமான ஊதியத்திற்கு வட்டி பெற வேண்டும் என்று வேணுகோபால் எடுத்துரைத்தார். இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரியங்கா, ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இன்று முன்னதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தேசிய தலைநகருக்கான 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு தில்லி அரசின் பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி என்று அவர் கூறினார். பட்ஜெட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று கூறிய முதல்வர், இது மோசமான பொருளாதாரத்திலிருந்து தில்லிக்கு மாற்றும் பட்ஜெட் என்று கூறினார்.

தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி; சிகிச்சையில் தாய்! என்ன நடந்தது?

ஹைதராபாத் அருகே தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், குழந்தைகளின் தாயும் ஆசிரியருமான லாவண்யா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப... மேலும் பார்க்க

முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றிணைந்தால்தான், நல்லாட்சி அமையும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்தில் `விகாஸித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற விழா 2025’ குறித்து... மேலும் பார்க்க

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போர... மேலும் பார்க்க

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகண... மேலும் பார்க்க

பட்ஜெட் வெளிப்படைத்தன்மை: பாஜக அரசைக் கேள்வி எழுப்பிய அதிஷி!

மாநில நிதிநிலைக்கான நிதி ஆதாரம் குறித்து தில்லி முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி பாஜக அரசைக் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, பட்ஜெட்டில் காட்டப்பட... மேலும் பார்க்க

அனைத்து மதத்துக்கும் பொதுவானவர்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் மமதாவுக்கு பாராட்டு

லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை சிறப்பாகக் கையாண்ட மமதா பானர்ஜியை பலரும் பாராட்டி வருகின்றனர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வியாழக்கிழமையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத... மேலும் பார்க்க