செய்திகள் :

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

post image

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் சிங் என்பவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த லோக்நாத் சிங்கிற்கு அவரது மனைவி உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமான நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் தொண்டைப் பகுதியில் அறுத்து கொலை செய்துள்ளார். அந்த பெண்ணின் தாயாரும் இதற்கு உதவி புரிந்துள்ளார்.

தன் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியாரை கைது செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது மனைவி கூறியபடி, மோசடி வழக்கு தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் கண்காணிப்பில் லோக்நாத் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

பெண் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்தபோது,

லோக்நாத் மற்றொரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். வயது வித்தியாசம் அதிகமிருந்ததால் லோக்நாத்தின் குடும்பத்தினர் அவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் லோக்நாத்துக்கும் தாங்கள் பார்த்த பெண்ணுக்கும்(லோக்நாத்தின் மனைவி) குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணம் முடிந்ததுமே மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார் லோக்நாத். இதன்பின்னரே அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு லோக்நாத் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன. இதுபற்றி கேட்கும்போது லோக்நாத், தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக லோக்நாத்தின் மனைவி அவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

எனினும் கணவனை மனைவி மற்றும் அவரின் தாயார் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | 'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்; உ.பி.யைவிட தமிழகத்துக்கு அதிக நிதி: மத்திய அமைச்சா் பதில்

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தைவிட, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா

தேசிய-மாநில பேரிடா் மேலாண்மை ஆணையங்களின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்யும் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு மக்களவை ஏற்கெனவே ஒப்புதல் வழங... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரை ‘தரகா்’ என விமா்சித்த திரிணமூல் எம்.பி.

மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் பெரும் கோடீஸ்வரா்களின் ‘தரகா்’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி விமா்சித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவா் மன்னிப்பு கேட்க வேண்ட... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் ம... மேலும் பார்க்க

சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, ‘சௌகத்-ஏ-மோடி’ எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது. இந்தப் புதிய பிரசாரத்தின்கீழ், ரமலான் பெருநாள் கொண்டாட்டத்துக்கு முன்னதா... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை- பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் ஒருவா் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு... மேலும் பார்க்க