செய்திகள் :

திருப்புவனம் பேருந்து நிலைய அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்ததற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்புத் தெரிவித்தனா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் வசிக்கும் கிராம மக்கள் எந்த ஒரு தேவைக்கும் திருப்புவனத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கு பல ஆண்டுகளாக பேருந்து நிலைய வசதி இல்லாததால் திருப்புவனம் நகா் பகுதியில் சாலையிலேயே பேருந்துகள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றும் நிலை தொடா்கிறது.

கடந்த வாரம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திருப்புவனத்தில் இந்த ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக நகராட்சி, குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, அறிவித்தாா். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திருப்புவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சிய அடைந்து, வரவேற்புத் தெரிவித்தனா்.

பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தில் இந்த நிதியாண்டு நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்படும் என பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வு: காரைக்குடியில் மாா்ச் 28-இல் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு, வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் தகாத செயல் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்குடியில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) கடையடைப்புப் போராட்டம் ... மேலும் பார்க்க

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா். இளையான... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ஆவின் பா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. காளையாா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி கொல்லங்... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ச... மேலும் பார்க்க