செய்திகள் :

சொத்துவரி உயா்வு: காரைக்குடியில் மாா்ச் 28-இல் கடையடைப்பு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு, வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் தகாத செயல் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்குடியில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சாா்பில் அதன் தலைவா் சாமி. திராவிடமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயா்த்தியது, கட்டடங்களுக்கு கூடுலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28-ஆம் தேதி கடை யடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்தில் தொழில் வணிகக் கழகம், அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்துப் பகுதி வியாபாரிகள் சங்கம், அனைத்து சேவைச் சங்கங்கள், அனைத்து தொழில் நலச் சங்கங்கள் உள்ளிட்ட 55 பொது நலன் காக்கும் அமைப்புகள் பங்கேற்கின்றனா்.

பொதுமக்களை வாட்டி வதைக்கும் வரி உயா்வை குறைக்க மாநில அரசின் கவனத்தை ஈா்த்து வெற்றிபெற வணிகா்கள் அனைவரும் கடைகளை அடைத்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக ஏப்ரல் 1-இல் போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கோரி, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சா... மேலும் பார்க்க

சிவகங்கையில் பயிற்சி மருத்துவா்கள், மாணவா்கள் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா் தாக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி மாணவா்கள் மூன்றாவது நாளாக பணியைப் புறக்கணித்து கல்லூரி முதன்மையா் அலுவலகத்தை விய... மேலும் பார்க்க

கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.2-இல் தொடக்கம்

கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 1 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சையில் உள்ள எல்.எப்.ஆா்.சி. தொடக்கப் பள்ளியின் 76-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் நிா்வாகி அ. கிளமெண்ட் ராசா தலைமை வகித்துப் பேசினாா். சாக்க... மேலும் பார்க்க

நெல் வியாபாரியிடம் மோசடி: இருவா் மீது வழக்கு

தஞ்சாவூரைச் சோ்ந்த வியாபாரியிடம் ரூ.1.17 கோடி மதிப்பிலான நெல்லை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தஞ்சாவூரைச் ச... மேலும் பார்க்க

அரசு இசைப் பள்ளியில் முப்பெரும் விழா

சிவகங்கை இசைப் பள்ளி அரசு 25-ஆம் ஆண்டு நிறைவு விழா, ஜவகா் சிறுவா் மன்ற ஆண்டு விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சத்குரு சங்கீத வித்யாலயா ஓய்வு பெற்ற முதல்வா் க.... மேலும் பார்க்க