பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
அரசு இசைப் பள்ளியில் முப்பெரும் விழா
சிவகங்கை இசைப் பள்ளி அரசு 25-ஆம் ஆண்டு நிறைவு விழா, ஜவகா் சிறுவா் மன்ற ஆண்டு விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சத்குரு சங்கீத வித்யாலயா ஓய்வு பெற்ற முதல்வா் க.தியாகராஜன் தலைமை வகித்தாா். அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியா் தி.சுரேஷ் வரவேற்றாா். பரதநாட்டிய ஆசிரியை எஸ்.கவிதா ஆண்டறிக்கை வாசித்தாா். நாகசுர கலைஞா் திருப்புவனம் வ.நாகு வாழ்த்திப் பேசினாா்.
திருப்பாம்பரம் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் குழுவினரின் நாகசுர, தவில் கச்சேரியும், அரசு இசைப் பள்ளி முன்னாள் மாணவா்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்களின் ஒயிலாட்டம், கரகாட்டமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சிறப்பு தேவார திருமுறை இன்னிசையும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவாா் அவிநாசிநாதனின் பண்ணிசையும் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி நரம்பிசையும், மதுரை பேராசிரியா் தியாகராஜனின் முழவிசை, மேஷாத்தின் கைப்பறை, பரமக்குடி புருசோத்தமன் முகா்சிங் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை, இசைப் பள்ளி ஆசிரியா்கள் திருவாசக ரமேஷ், ஜெகதீசன், மணிகண்டன், செல்வமுத்துகுமாரசாமி சண்முகநாதன், ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் செய்தனா். மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
மிருதங்க ஆசிரியா் நாராயணன் நன்றி கூறினாா்.