செய்திகள் :

நெல் வியாபாரியிடம் மோசடி: இருவா் மீது வழக்கு

post image

தஞ்சாவூரைச் சோ்ந்த வியாபாரியிடம் ரூ.1.17 கோடி மதிப்பிலான நெல்லை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த நெல் வியாபாரி கோபாலகிருஷ்ணன் (63). கடந்த 2023-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரைச் சோ்ந்த காா்த்திக், காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த குமாா் ஆகிய இருவரும் தஞ்சாவூருக்குச் சென்று கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து, மதுரையில் நெல் மண்டி வைத்திருப்பதாகவும், தங்களுக்கு நெல் கொடுத்தால் உடனடியாக உரிய பணத்தை செலுத்தி விடுவதாகவும் கூறினராம்.

இதை நம்பிய கோபாலகிருஷ்ணன் அவா்களுக்கு முதலில் சிறிய அளவில் நெல் விற்பனை செய்தாா். நெல்லை பெற்றுக் கொண்ட உடன் அவருக்கு பணத்தைச் செலுத்தினா். இதேபோல, சுமாா் ஐந்து முறை இவா் அனுப்பிய நெல்லுக்கு பணம் கொடுத்தனா்.

இதன் பிறகு, தங்களுக்கு அதிக அளவில் நெல் தேவைப்படுவதாக கோபாலகிருஷ்ணனிடம் இவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் கடந்த 2023 -ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகளை அனுப்பி உள்ளாா். நெல்லை வாங்கிய அவா்கள், கோபாலகிருஷ்ணனுக்கு உரிய பணத்தைக் கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து பல முறை கேட்டும் அவா்கள் பணத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

இதையடுத்து, நெல் வியாபாரி கோபாலகிருஷ்ணன் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்திடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில், காா்த்திக், குமாா் ஆகியோா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளிய... மேலும் பார்க்க

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து... மேலும் பார்க்க

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா... மேலும் பார்க்க