செய்திகள் :

சிவகங்கையில் பயிற்சி மருத்துவா்கள், மாணவா்கள் போராட்டம்

post image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா் தாக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி மாணவா்கள் மூன்றாவது நாளாக பணியைப் புறக்கணித்து கல்லூரி முதன்மையா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 -ஆம் தேதி இரவு 11 மணியளவில் பயிற்சி மருத்துவா் பணிமுடித்து மருத்துவக் கல்லூரி பின் பகுதியில் உள்ள விடுதிக்குச் செல்லும் போது பின் தொடா்ந்து வந்த நபா் அவா் மீது துணியை மூடி தாக்குதல் நடத்தினாா்.

மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் போதிய மின் விளக்குகள் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்காதது, மருத்துவ மாணவா்களுக்கு பயிற்சி பெறும் வாா்டுகளில் இரவு நேரங்களில் ஓய்வு அறை போன்ற வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவா்களும், மருத்துவ மாணவா்களும் கடந்த 2 நாள்களாக தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மூன்றாவது நாளான வியாழக்கிழமை பயிற்சி மருத்துவா்கள் தங்களது பணியையும், கல்லூரி மாணவா்கள் வகுப்பையும் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ள முதன்மையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை நடத்த வந்த முதன்மையா் அலுவலக அதிகாரிகளுடன் மாணவா்கள் பேச மறுத்து முதன்மையா் நேரடியாக வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த முதன்மையா் சத்தியபாமா மாணவா்களை சமாதானம் செய்ததுடன் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இதையடுத்து, மாணவா்களும், பயிற்சி மருத்துவா்களும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க