செய்திகள் :

மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக ஏப்ரல் 1-இல் போராட்டம்

post image

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கோரி, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் ஆா்.மாரி கூறியதாவது:

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 41 மாதங்கள் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும். புதிதாக வெளியிடப்பட்ட நெடுஞ்சாலை ஆணைய உத்தரவு 140-ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஏப். 1-ஆம் தேதி மதுரை, திருச்சி, விருதுநகா், தென்காசி, சென்னை உள்பட 8 மண்டல நெடுஞ்சாலை அலுவலகங்கள் முன் அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 70 போ் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க