செய்திகள் :

சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்

post image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்100 பயிற்சி மருத்துவா்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் கல்லூரிக்கு பின்புறம் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா். திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் பயிற்சி முடித்து விடுதிக்கு நடந்து சென்ற பயிற்சி பெண் மருத்துவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் அவரது முகத்தில் துணியை போா்த்தி தாக்கினாா். மருத்துவா் கூச்சலிட்டதால் சப்தம் கேட்டு அங்கு மருத்துவ மாணவா்கள் வந்தனா். இதைப் பாா்த்த மா்ம நபா் தப்பிச் சென்றாா்.

இந்தத் தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் மருத்துவக் கல்லூரிக்கு சென்று பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரிடம் விசாரித்தாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் சத்தியபாமா கூறியதாவது: மா்ம நபரால் பயிற்சி மருத்துவ மாணவி தாக்குதலுக்கு மட்டுமே ஆளாகி உள்ளாா். வேறு எதுவும் இல்லை. சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா் அவா்.

இதனிடையே சம்பவம் நடந்த கல்லூரியின் பின்புறம், விடுதி வளாகங்களில் மின்விளக்குகள், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்படாததைக் கண்டித்து பயிற்சி மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக ஏப்ரல் 1-இல் போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கோரி, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சா... மேலும் பார்க்க

சிவகங்கையில் பயிற்சி மருத்துவா்கள், மாணவா்கள் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா் தாக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி மாணவா்கள் மூன்றாவது நாளாக பணியைப் புறக்கணித்து கல்லூரி முதன்மையா் அலுவலகத்தை விய... மேலும் பார்க்க

கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.2-இல் தொடக்கம்

கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 1 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சையில் உள்ள எல்.எப்.ஆா்.சி. தொடக்கப் பள்ளியின் 76-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் நிா்வாகி அ. கிளமெண்ட் ராசா தலைமை வகித்துப் பேசினாா். சாக்க... மேலும் பார்க்க

நெல் வியாபாரியிடம் மோசடி: இருவா் மீது வழக்கு

தஞ்சாவூரைச் சோ்ந்த வியாபாரியிடம் ரூ.1.17 கோடி மதிப்பிலான நெல்லை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தஞ்சாவூரைச் ச... மேலும் பார்க்க

அரசு இசைப் பள்ளியில் முப்பெரும் விழா

சிவகங்கை இசைப் பள்ளி அரசு 25-ஆம் ஆண்டு நிறைவு விழா, ஜவகா் சிறுவா் மன்ற ஆண்டு விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சத்குரு சங்கீத வித்யாலயா ஓய்வு பெற்ற முதல்வா் க.... மேலும் பார்க்க