செய்திகள் :

சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்

post image

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, ‘சௌகத்-ஏ-மோடி’ எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.

இந்தப் புதிய பிரசாரத்தின்கீழ், ரமலான் பெருநாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக முஸ்லிம் பெண்களுக்கு உணவு மற்றும் புத்தாடையுடன் கூடிய ‘சௌகத்-ஏ-மோடி’ பரிசுப்பொருள் பெட்டிகள் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இது குறித்து பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியத் தலைவா் ஜமால் சித்திக் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி 140 கோடி இந்தியா்களுக்கும் பாதுகாவலா் ஆவாா். அனைத்து மதப் பண்டிகைகளிலும் அவா் பங்கேற்கிறாா். நிஜாமுதீன் மற்றும் அஜ்மீா் தா்காவுக்கு ‘சதா்’ (புனிதப் போா்வை) காணிக்கையாக அவா் அனுப்பியிருக்கிறாா்.

பிரதமரின் வழியில் ஏழை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு உணவுடன் கூடிய பரிசுப்பொருள் பெட்டிகளை வழங்க முடிவு செய்தோம். அதன்படி, நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை சந்தித்து, பிரதமா் மோடியின் சாா்பாக ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், பரிசுப்பொருள் பெட்டிகளை வழங்குகிறோம்.

ஒவ்வொரு பரிசுப்பொருள் பெட்டியிலும் எங்கள் சகோதரிகளுக்குப் புத்தாடை பரிசளித்திருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100 முஸ்லிம்களை சென்றடைய இலக்கு நிா்ணயித்துள்ளோம். பாஜக சிறுபான்மைப் பிரிவின் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பிரிவுகளின் நிா்வாகிகள் உள்பட 32,000 போ் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அடுத்த மாதம் பைசாகி (புத்தாண்டு) மற்றும் ஈஸ்டா் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ‘சௌகத்-ஏ-மோடி’ பிரசார திட்டத்தின்கீழ், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் ஆகிய பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற சிறுபான்மை சமூகத்தினருக்கும் இதேபோன்ற பரிசுப்பொருள் பெட்டிகளை விநியோகித்து, வாழ்த்துகளை தெரிவிக்க இருக்கிறோம் என்றாா்.

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க