செய்திகள் :

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

post image

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கு குறைந்துள்ளது.

இதையும் படிக்க : மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

’அலுவலகங்களில் பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில் டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனம் செய்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நடுத்தர அளவிலான பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2020 - 2024 இடையிலான காலகட்டத்தில் 4.13 சதவிகிததில் இருந்து 8.93 சதவிகிதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச திறன் மையங்களின் பெண்களின் பங்களிப்பு 2022 ஆம் ஆண்டு 42.40 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024 இல் 38.30 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2023 இல் 33.60 சதவிகிதமாக இருந்தது. இந்த ஏற்ற இறக்கத்துக்கு சுழற்சி முறை வேலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கிகள், எரிசக்தி, உற்பத்தி போன்ற தொழில்நுட்பம் இல்லாத பிற துறைகளில் ஆண்களின் ஆதிக்கம் தொடர்வதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு 14 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டை (1.90%) ஒப்பிடுகையில் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட ஒரே பதவியில் இருந்தாலும், பாலின ரீதியில் ஊதிய இடைவெளி தொடர்ந்து கொண்டு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிலை பதவிகளில் 6 சதவிகிதமாகவும் நடுத்தர பதவிகளில் 19 சதவிகிதமாகவும் உயர் பதவிகளில் 13 சதவிகிதமாகவும் ஊதிய இடைவெளி இருக்கிறது.

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வா... மேலும் பார்க்க