செய்திகள் :

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

post image

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் உள்பட 9 நக்சலைட்டுகள் இன்று சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில்,

மாவோயிஸ்டு கொள்கைகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளினாலும் அவர்கள் பழங்குடியினரைச் சீரழிப்பதினாலும் அதிலிருந்து விலகியதாகவும், பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் தற்போது அதிகரித்து வருவதாலும் மூத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிராமங்களில் வளர்ச்சியை எளிதாக்கும் நோக்கில் மாநில அரசின் திட்டத்தால் சரணடைந்த நக்சல்கள் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சரணடைந்த தீவிரவாதிகளில், மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் நிறுவனத்தின் எண் 2-ஐச் சேர்ந்த பண்டு என்கிற பண்டி மட்கம் (22) ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். மாசே என்கிற வெட்டி கன்னி (45) மற்றும் பதம் சம்மி (32) ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. ஒரு பெண் மற்றும் 3 ஆண் நக்சல்களுக்கு தலா ரூ. 2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும், சரணடைந்தவர்களுக்கு அரசு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு அமைத்துத் தரப்படும் எனவும், உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுக்மாவில் கடந்த 2020ல் மின்பா தாக்குதல் உள்பட பல்வேறு நக்சல் தாக்குதல்களில் பண்டு ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது, இதில் 17 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சரணடைந்த மற்றொரு நக்சல் பாதுகாப்புப் படையினர் மீதான பல தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் மொத்தம் 792 நக்சலைட்டுகள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வா... மேலும் பார்க்க