செய்திகள் :

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

post image

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஊழல் நடவடிக்கைகள் நடந்ததாகக் கூறி, ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷியின் தேர்தலை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்காஜி பகுதியில் வசிக்கும் கமல்ஜித் சிங் துக்கல், ஆயுஷ் ராணா ஆகியோர் அதிஷியின் தேர்தலை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவில், அவரும் அவரது தேர்தல் முகவர்களும் தேர்தலின்போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ​​இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோர் மனுவில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டதற்கு ஆட்சேபனை எழுப்பினார்.

நீதிபதி ஜோதி சிங், இந்தியத் தேர்தல் ஆணையம், தில்லி காவல்துறை, அதிஷி தேர்தலில் வெற்றி பெற்ற கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டது.

கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வா... மேலும் பார்க்க