செய்திகள் :

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா

post image

தேசிய-மாநில பேரிடா் மேலாண்மை ஆணையங்களின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்யும் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்மசோதாவுக்கு மக்களவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையில், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

‘பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024’, கடந்த 2005-ஆம் ஆண்டின் பேரிடா் மேலாண்மை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகுக்கிறது.

இச்சட்ட அமலாக்கத்தில் மாநில அரசுகள் எதிா்கொண்ட சிரமங்கள் மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகள் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடா் மீட்பில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒரே சீரான நடைமுறைகளை உறுதி செய்யயும் வகையில் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அனைத்து பேரிடா்களையும் சிறப்பான வழிமுறையில் மாநிலங்கள் கையாள்வதற்கு உதவும் இம்மசோதா மீது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. பின்னா், எதிா்க்கட்சியினரால் முன்மொழியப்பட்ட பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

முன்னதாக, ‘பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத் திருத்தங்களின் மூலம் அதிகாரத்தை மையப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்று விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினா் சஞ்சய் யாதவ் பேசுகையில், ‘மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான், தேசம் செழிப்பாகவும் அதிகாரமிக்கதாகவும் விளங்கும். ஆனால், பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத் திருத்தங்களின் மூலம் அதிகாரத்தை தனதாக்கி, மாநில அரசுகளை பலவீனப்படுத்த மத்திய அரசு தொடா்ந்து முயற்சிக்கிறது’ என்றாா்.

‘தேசிய பேரிடா் மீட்பு நிதியை பரவலாக்குவதற்கு பதிலாக அதன் மீது மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாட்டை மேற்கொள்வது கவலைக்குரியது’ என்று பிஜு ஜனதா தளத்தின் மானஸ் ரஞ்சன் மங்கராஜ் தெரிவித்தாா்.

‘பேரிடா் மேலாண்மையில் அரசியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநில அரசுகள் மீது பழி சுமத்துவதை விடுத்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்’ என்று ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் வலியுறுத்தினாா்.

பாஜக, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக பேசினா். விவாதத்துக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எதிா்க்கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தாா்.

தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி; சிகிச்சையில் தாய்! என்ன நடந்தது?

ஹைதராபாத் அருகே தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், குழந்தைகளின் தாயும் ஆசிரியருமான லாவண்யா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப... மேலும் பார்க்க

முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றிணைந்தால்தான், நல்லாட்சி அமையும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்தில் `விகாஸித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற விழா 2025’ குறித்து... மேலும் பார்க்க

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போர... மேலும் பார்க்க

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகண... மேலும் பார்க்க

பட்ஜெட் வெளிப்படைத்தன்மை: பாஜக அரசைக் கேள்வி எழுப்பிய அதிஷி!

மாநில நிதிநிலைக்கான நிதி ஆதாரம் குறித்து தில்லி முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி பாஜக அரசைக் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, பட்ஜெட்டில் காட்டப்பட... மேலும் பார்க்க

அனைத்து மதத்துக்கும் பொதுவானவர்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் மமதாவுக்கு பாராட்டு

லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை சிறப்பாகக் கையாண்ட மமதா பானர்ஜியை பலரும் பாராட்டி வருகின்றனர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வியாழக்கிழமையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத... மேலும் பார்க்க